நீதி நிலைத்தது, தர்மம் வென்றது.. ஜெ. விடுதலையை போஸ்டர் அடித்து கொண்டாடும் தீயணைப்பு துறை
கோவை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் கோவையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருந்தோம்பலுக்கு புகழ் பெற்ற கோவை நகர மக்களுக்கு இன்று வித்தியாசமான காட்சி ஒன்று கண்ணில்பட்டது. ஆம்.. சாலையோர சுவர்களில் ஜெயலலிதாவை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இந்த வித்தியாச காட்சிக்கு காரணம்.

தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு போஸ்டர் அடிப்பதும், புகழ்பாடுவதும் வழக்கம்தானப்பா.. இதெல்லாம் ஒரு மேட்டரா என்று யாராவது நினைத்தால், கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். இது அதுக்கும் மேல.
ஏனெனில், அந்த போஸ்டரை யாரோ அதிமுகவின் அடிமட்டத் தொண்டரோ, அம்மா விசுவாசியோ ஒட்டவில்லை. போஸ்டரை ஒட்டியதாக அந்த போஸ்டரிலேயே போடப்பட்ட பெயர்தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். 'தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, கோவை மாவட்டம்' என்று அச்சடித்தவர்கள் பெயர் அந்த போஸ்டரில் போடப்பட்டுள்ளது.
போஸ்டரில் ஜெயலலிதா இரட்டை விரலை காண்பிக்கும் போட்டோ, சிரித்தபடி உள்ள போட்டோ என இரட்டை போட்டோக்களும், வலது மூலையில், எம்ஜிஆரின் போட்டோவும் இருக்க, மேலே போட்ட வாசகம் "நீதி நிலைத்தது, தர்மம் வென்றது". அதற்கும் கீழே, 'மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மாண்புமிகு இதய தெய்வம், அம்மா' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, காவல்துறை, முத்திரைத்தாள் துறை, கலால்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு அரசுத்துறை ஊழியர்களும் போஸ்டர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே தலைசுற்றுகிறது அல்லவா?
அரசு ஊழியர் என்பவர் அரசுக்கான ஊழியராகும். பொதுமக்களுக்கான ஊழியராகும். அப்படியிருக்கும்போது இந்த போஸ்டர் எப்படி ஒட்டப்பட்டது என்பது புரியவில்லை. இந்த போஸ்டர் போட்டோ, சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவிவருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications