கோவை மாணவி பலி: பேரிடர் பயிற்சி தந்தவர் தனியார் அமைப்பின் பயிற்சியாளர்.. விசாரணையில் அதிர்ச்சி!
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த பயிற்சியாளர் தனியார் அமைப்பையே சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video
கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த பயிற்சியாளர் தனியார் அமைப்பையே சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்றதனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.
மாடியில் இருந்து கீழ் குதிக்கும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை சார்பாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால் லோகேஸ்வரிக்கு பயிற்சி கொடுத்த அந்த குறிப்பிட்ட பயிற்சியாளர்,தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்தவரே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
அவர் தனியார் அமைப்பில் பணியாற்றி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஏற்கனவே பயிற்சி அளித்து இருக்கிறார். இதற்கு முன்பு இதே போல் கல்லூரியில் பயிற்சி அளித்து இருக்கிறார்.
இந்த வீடியோக்களை காட்டித்தான் இந்த கல்லூரியிலும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள். தற்போது மாணவியின் மரணத்திற்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி இறந்ததை அடுத்து தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையிலேயே ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்தவர் கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.