For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது பயிற்சியாளர் தள்ளியதால் விபரீதம்.. கோவை மாணவி பரிதாப பலி

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை மாணவியின் உயிரை பறித்த பேரிடர் பயிற்சியாளர்.

    கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்ற தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு பேரிடர் பிரச்சனைகளில் போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று இதில் கற்றுத்தரப்பட்டது. அதேபோல் தீ விபத்து சம்பவத்தின் போது எப்படி மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க வேண்டும் என்றும் கற்றுத்தந்தனர்.

    Coimbatore: A Girl student dies during Disaster management training, Trainer arrested

    இந்த பயிற்சிக்காக, பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர், லோகேஸ்வரி என்று மாணவியை அழைத்துள்ளார். அந்த மாணவி அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கும் போது, அந்த மாணவி, அந்த மோசமான சம்பவ நடந்து இருக்கிறது. மாடியில் இருந்து கீழே விழும் போது கீழே வலை வைத்து பிடிக்கும் முறையை பயிற்சி அளித்து இருக்கிறார்கள். இதில் கீழே விழும் போது, அந்த மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு இருக்கிறது.

    பலத்த காயங்களுடன் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை செய்ய முடியாது கஷ்டம் என்றதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார்.

    A Girl student dies during Disaster management training in Coimbatore

    இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. கோவை போலீசால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    இந்த நிலையில் பிரதேச பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்கு பின் லோகேஸ்வரி உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    A Girl student named Logeshwari dies during Disaster management training in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X