பைக் வாங்கிக் கொடுக்க பெற்றோர் மறுப்பு – விரக்தியில் வாலிபர் தற்கொலை
கோவை: கோவையில் பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பாக்குக்காரர் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. காய்கறி வியாபாரியான இவரது மகன் கார்த்திகேயன். பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார்.
இதனிடையே தனக்கு பைக் வாங்கிக் கொடுக்கும்படி, பெற்றோரிடம் கார்த்திகேயன் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர்கள் பைக் வாங்கித் தராததால் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று முனியப்பன் கோவில் அருகேவுள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்சாரம் செல்லும் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது மின்சார தாக்குத்தலுக்கு உள்ளான கார்த்திகேயன் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.
ஆபத்தான நிலையிலிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிலமணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.