கோவையில் பலத்த மழைக்கு பிறகு "நில அதிர்வு".. தூக்கத்தை தொலைத்த மக்கள்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் பரவலாக பெய்த மழை..மக்கள் மகிழ்ச்சி- வீடியோ
கோவை: கோவை அன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு மற்றும் இடிக்கு பிறகு ஏற்பட்ட அதிர்வை நில அதிர்வு என நம்பி அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

கோவையில் அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பயங்கர சப்தத்துடன் இடி இடித்தது. இது நில அதிர்வை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
[ஆரம்பமே அசத்தல்... வடகிழக்கு பருவமழைக்கு முத்தாய்ப்பாக தமிழகத்தில் மழை!]
இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். சுமார் 8 நொடிகள் வரை நீடித்த அதிர்வை நில அதிர்வு என நினைத்த மக்கள் இடியால் ஏற்பட்ட அதிர்வு என்பதையறிந்து நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications