மெரினாவில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி... கடலில் குளித்தபோது பரிதாபம்

சென்னை மெரினா கடலில் குளித்த கல்லூரி மாணவர் அலையில் சிக்கி பலியானார். அவரது உடலை நீச்சல் வீரர்கள் மீட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா கடலில் குளித்த நியூ காலேஜ் மாணவர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை நீச்சல் வீரர்கள் அவரது உடலை மீட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் முகமது நவீத். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜில் படித்து வந்தார்.

College student died in Chennai Marina while taking bath

நண்பர்களுடன் மெரினா கடலில் அவர் குளிக்கச் சென்றார். அப்போது ஏற்பட்ட அலையில் மாணவர் நவீத் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நவீத்தைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினரும் நீச்சல் வீரர்களும் மாயமான நவீத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நவீத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர் நவீத் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் நியூ காலேஜ் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+