பட்டப்பகலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு - தேடுதல் வேட்டையில் போலீசார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மாணவர் ஒருவரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சென்ற கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கல்லூரி செல்ல பேருந்துக்கு காத்திருந்த அம்மாணவர் செல்வராஜ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த எதிர்பாராத தாக்குதலில் படுகாயமடைந்த அரசுக் கல்லூரி மாணவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவரை வெட்டி விட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications