பிரசவ வார்டில் புகுந்து கழிப்பறையை எட்டிப் பார்த்த கல்லூரி மாணவர்: மடக்கிப் பிடித்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே அரசு மருத்துவமனையில் உள்ள பிரவச வார்டில் வாலிபர் புகுந்து கலட்டா செய்ததால் பெண்கள் அலறினர். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நாகர்கோவில் அருகே உள்ள குழித்துறை அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதை யாரும் கவனிக்கவில்லை என்றும் தெரிகிறது.

பிரசவ வார்டுக்குள் ரகசியமாக புகுந்த வாலிபர் அங்குள்ள கழிவறைக்கு பெண்கள் செல்லும்போது எட்டிப்பார்த்து ரசித்துள்ளார். மேலும் தகாத செயல்களிலும் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார்.

அதனை கழிவறைக்கு சென்ற ஒரு பெண் தற்செயலாக பார்த்து சத்தம் போட்டு அலறினார். இதையடுத்து அங்கு ஓடி வந்த நோயாளிகளின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவரது அண்ணன் மனைவிக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனை பார்ப்பதற்காக அங்கு வந்ததாகவும் கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து

வருகிறார்கள். இந்த சம்பவம் பிரசவ வார்டில் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+