கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
கரூர்: தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் அருகே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் பீரித்தி ரோஜா(19). இவர், கரூர் அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி பீரித்தி ரோஜா தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கல்லூரி நிர்வாகத்தினர் வீடியோ எடுக்க கூடாது என்று உத்திரவிட்டதோடு, மீறி எடுத்தால் அடியாட்களை வைத்து அடிப்போம், என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications