படிக்கப் போவதா? பஸ் கட்டணத்துக்காக வேலைக்குப் போவதா? தன்னெழுச்சியாக வெடிக்கும் மாணவர் கிளர்ச்சி
அரசு பேருந்து கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர், இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை : அரசு பேருந்து கட்டணம் இரட்டிப்பாகியுள்ளதால் அன்றாடம் கல்லூரி வந்து செல்வதே கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். படிப்பதற்காக கல்லூரிக்கு வருவதா அல்லது பேருந்துக்கு கட்டணம் செலுத்துவதற்காக வேலைக்கு செல்வதா என்று மாணவர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
டீசல் விலை உயர்வு, பேருந்து உதிரி பாகங்களின் விலை உயர்வை காரணமாக காட்டி தமிழக அரசுப் பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால் அன்றாடம் போக்குவரத்துக்கு பேருந்தை பயன்படுத்துவோருக்கான பயணச் செலவு இரட்டிப்பாகியுள்ளது. சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தஞ்சாவூர்,மதுரை, திண்டுக்கல்,நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் 3வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் கேள்வி
மாணவர்கள் தன்னெழுச்சியாக ஈடுபட்டுள்ள இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. கூலித் தொழில் செய்யும் பெற்றோர், அன்றாட சம்பளம் வாங்கி பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோரின் நிலையை அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்வி பாதிக்கும்
இது வரை கல்லூரிக்கு வந்து செல்ல ரூ.40 செலவான நிலையில், தற்போது இது இரட்டிப்பாகியுள்ளது, இதனால் கல்லூரிக்கு வந்து செல்ல மட்டுமே ரூ. 80 செலவாகிறது என்று கூறுகிறார் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மாணவி. தானும் தன்னுடைய சகோதரியும் கல்லூரிக்கு வந்து செல்வதாகவும் ஒரு நாளைக்கு இருவருக்குமான பேருந்து செலவே ரூ. 160 என்றால் தினக்கூலி வாங்கும் பெற்றோரின் ஒரு நாள் சம்பளம் ரூ. 200ல் மிஞ்சுவது என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.

கூலித் தொழிலாளிகளின் நிலை
பேருந்து கட்டணத்திற்கே பணத்தை கொடுத்தவிட்டால் தாங்கள் எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்வது என்று கேள்வி எழுப்பும் மாணவிகள், பெண்கள் கல்லூரிக்கு வந்து படிக்கக் கூடாது வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தான் அரசு பேருந்து கட்டண உயர்வின் மூலம் உணர்த்துகிறதா என்று கேள்வி எழுப்புகின்றனர் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

எங்கள் மீதா சமத்துவது
இலவசங்களாக அள்ளிக் கொடுத்துவிட்டு தற்போது அரசுப் போக்குவரத்து கழகங்களை நடத்த முடியவில்லை என்று கட்டண சுமையை அரசின் மீது சுமத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். உடனடியாக பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்லூரி மாணவிகள்.

உணருமா அரசு?
கல்லூரி மாணவர்கள் வேண்டுமென்றே போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், கல்லூரி வகுப்பை புறக்கணிப்பதற்காக நடத்தும் வீண் வேலை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. காரில் வந்து செல்வோருக்கு எங்கள் கஷ்டம் புரியாது, தினமும் வாழ்க்கைக்காக பேராடும் தங்களுக்குத் தான் கட்டண உயர்வின் வலி புரியும் என்று கிராமப் புற மாணவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை உணருமா அரசு? விவசாயம் பொய்த்து, கூலித் தொழிலுக்கு பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து தான் இந்த மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு செல்லுமா?
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications