நீட்.. பெசன்ட் நகரில் திடீரென ஒன்றுகூடி போராடிய கல்லூரி மாணவர்கள்! போலீஸ் அதிர்ச்சி
சென்னை : அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மாணவர்கள் திடீரென கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூரில் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை தடுத்து நிறுத்தும் விதமாக கல்லூரிகளுக்கு நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று வாரவிடுமுறை நாள் என்பதால் மாணவர்களின் போராட்டங்கள் பொதுஇடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் மாணவர்கள் ஒன்று திரளக் கூடும் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சில மாணவர்கள் ஒன்று திரண்டனர். அனிதாவின் படத்தை கையில் ஏந்தி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கலைந்த செல்லுமாறு வலியுறுத்தினர், எனினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!











Click it and Unblock the Notifications