கூடங்குளத்தில் கோளாறு: வணிக ரீதியிலான மின் உற்பத்தி இப்போதைக்கு இல்லை
கூடங்குளம்: கூடங்குளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி 2015 ஜனவரி 22-ல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டு பங்களிப்புடன், கூடங்குளத்தில் தலா 1000 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகள் இரண்டு நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில் முதலாவது அணு உலையில் இருந்து அக்டோபர் 22, 2014 முதல் வணிகரீதியில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.22 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எப்போது தொடங்கும்
இது தொடர்பான அறிக்கை, மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், டிசம்பர் 22-க்குள் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2015ல் மின் உற்பத்தி
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரிசெய்யப்படாததால், முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி 2015 ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கப்படும் என அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 10-ம் தேதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 8 வாரகாலம்
முதலாவது அணு உலையின் பிளேடு, டர்பைன் போன்றவற்றை சீரமைக்க இன்னும் 8 வார காலம் தேவைப்படுவதால் வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும் நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற பொருட்களா?
கூடங்குளம் அணு மின்நிலைய முதல் உலையில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்படும் நிலையில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் சமூக ஆர்வலர்களையும், கூடங்குளம் பகுதிகவாசிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications