கூடங்குளத்தில் கோளாறு: வணிக ரீதியிலான மின் உற்பத்தி இப்போதைக்கு இல்லை
கூடங்குளம்: கூடங்குளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி 2015 ஜனவரி 22-ல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டு பங்களிப்புடன், கூடங்குளத்தில் தலா 1000 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகள் இரண்டு நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில் முதலாவது அணு உலையில் இருந்து அக்டோபர் 22, 2014 முதல் வணிகரீதியில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.22 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எப்போது தொடங்கும்
இது தொடர்பான அறிக்கை, மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், டிசம்பர் 22-க்குள் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2015ல் மின் உற்பத்தி
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரிசெய்யப்படாததால், முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி 2015 ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கப்படும் என அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 10-ம் தேதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 8 வாரகாலம்
முதலாவது அணு உலையின் பிளேடு, டர்பைன் போன்றவற்றை சீரமைக்க இன்னும் 8 வார காலம் தேவைப்படுவதால் வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும் நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற பொருட்களா?
கூடங்குளம் அணு மின்நிலைய முதல் உலையில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்படும் நிலையில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் சமூக ஆர்வலர்களையும், கூடங்குளம் பகுதிகவாசிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications