திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இணையலாம், காங். பொறுப்பில் தேமுதிக: டி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர எந்த தடையும் இல்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் நடுவே இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து டி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இணைவதற்கு தடை கிடையாது. அவர்களை வரவேற்கிறோம். இக்கூட்டணியை இன்னும் பலமடையச் செய்ய தேமுதிகவை இணைக்க வேண்டும். இதற்கான முயற்சியை காங்கிரஸ் எடுக்க வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழர் பிரச்சினைகளில் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. இதை முன் வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
கம்யூனிஸ்டுகளை வரவேற்பதாக கூறிய இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதாக கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.