மக்களே கவனிக்கவும்.. ஆர்.கே.நகர் தேர்தலன்று நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 21ம் தேதி தொகுதிக்கு உட்பட்ட தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், தொழிலாளர் துறை கமிஷனர் பாலசந்திரன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:
தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அன்று தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications