ஓபிஎஸ் உடம்பில் கையே இருக்காது.. கொலைமிரட்டல் விடுத்த கலைராஜன் மீது போலீசில் புகார்
முதல்வர் ஓபிஎஸ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக மாவட்ட செயலர் கலைராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வதுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலர் கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கலைராஜன், அந்த பன்னீர்செல்வம் எத்தனை படை கொண்டு வந்து இந்த அண்ணா திமுகவை கைப்பற்றப் போகிறார்?

பொறுத்திருந்து பாருங்கள்...நாங்கள் அண்ணா திமுகவை கைப்பற்றப் போகிறோம் என்கிறார். அவர் கையை வெச்சு பார்க்கட்டும் அவரு உடம்புல கையே இருக்காது.. இல்லாம பண்ணியிருவோம் என பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தார்.
கலைராஜனின் இந்த மிரட்டல் அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர், கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications