வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறாங்க: அமைச்சர் செல்லூர் ராஜு மீது சிபிஎம் வேட்பாளர் புகார்
மதுரை: மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் செல்லூர் ராஜு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ. வாசுகி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சர் செல்லூர் ராஜு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ. வாசுகி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மதுரை மாநகராட்சி 100-வது வார்டில் வேட்பாளர் செல்லூர் ராஜு வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பறக்கும் படை அலுவலர்களுக்குப் புகார் தெரிவித்தனர்.
ஒன்றரை மணி நேரம் கழித்தே பறக்கும் படை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் அப்பகுதியைவிட்டு அதிமுகவினர் சென்றுவிட்டனர். பறக்கும் படையினர் உடனடியாக வந்திருந்தால், பணம் பட்டுவாடா செய்தவர்களைப் பிடித்திருக்க முடியும். ஆகவே, இதுபோன்ற புகார்கள் வரும்போது பறக்கும் படை குழுவினரை விரைந்து செயல்பட அறிவுறுத்த வேண்டும்.
அப்போது தான் அதன் நோக்கம் நிறைவேறும். அதோடு, பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலின்போதே ஆளுங்கட்சியான அதிமுக பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டது. இப்போதும் அந்த விதிமீறல்கள் தொடர்கின்றன. அதைத் தடுத்து நியாயமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications