For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படியும் ஒரு கொடூரன்.. பெண்ணை ஆபாசப் படம் பார்க்கச் சொன்ன கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது!

Google Oneindia Tamil News

தென்காசி: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கம்ப்யூட்டர் மையம் நடத்தி வரும் நபர், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை வற்புறுத்தி ஆபாசப் படம் பார்க்குமாறு தொல்லைக் கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாவூர்சத்திரத்தை அடுத்த மருதடியூர் பகுதியை சார்ந்தவர் மருரூபராஜா. இவர் தென்காசி கன்னிமாரம்மன் பஜாரில் கணினி மையம் நடத்தி வருகிறார். இங்கு இதே ஊரை சார்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவரை மருரூபராஜா அங்கிருந்த சி.டி.க்களில் உள்ள ஆபாசப் படங்களை பார்க்குமாறு கூறியுள்ளார்.

Computer centre owner arrested for forcing woman staff to see Obscene CDs

மேலும் அவருக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தென்காசி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து மருரூபராஜாவை கைது செய்து கணினி, ஆபாச சிடிக்களை பறிமுதல் செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

English summary
A computer centre owner was arrested for forcing his woman staff to see Obscene CDs in Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X