கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்பது? ஆனந்த் ராஜ் சுளீர் கேள்வி
கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என ஆனந்த் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என ஆனந்த் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ஆனந்த்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கட்சி மற்றும் ஆட்சியிர் குடும்ப தலையீடு இருக்காது என டிடிவி தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அதிமுக உடைந்துவிடாமல் இருக்க உள்ளட்சித் தேர்தலுக்கு முன்பு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications