நெல்லையில் குடியரசு தின விழா குழப்பம்: ஆளே இல்லாததால் பரபரப்பு
நெல்லை: தமிழகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் நெல்லையில் சற்று முன்னதாகவே கொண்டாடப்பட்டதால் விழா நடந்த இடத்தில் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக கிடந்தன. இது நேர மாற்றத்தால் நடந்த குழப்பத்தால் நேர்ந்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் குடியரசு தினவிழா காலை 8.30 மணிக்கு நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தின விழா நடக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம் சாலைகள் முழுவதும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நிறைந்த கூட்டமாக காணப்படும்.

இந்த முறை பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அந்த வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு செல்லும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பள்ளி, மாணவ, மாணவிகள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அதே போன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கிலும் கேலரிகள் காலியாக கிடந்தன. பார்வையாளர்கள் அமர்வதற்காக மைதானத்தில் மூன்று இடங்களில் ஷாமியானா பந்தல் போடப்பட்டு சேர்களும் போடப்பட்டிருநதன. ஆனால் அவைகளில் பெரும்பாலானவை காலியாக கிடந்தன.
இந்த தவறு நேர மாற்றத்தால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 8.30 மணிக்கு பதிலாக 8 மணிக்கே கொடியேற்றியதால் பலருக்கும் விபரம் தெரியாமல் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications