சேலம்: ஹைகோர்ட் உத்தரவை மீறி காமராஜர் சிலை திறக்கப்பட்டதால் பதற்றம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே உயர் நீதிமன்ற உத்தரவை மீறி காமராஜர் சிலையை திறந்து காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்தனர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்மவீரர் காமராஜரின் 114-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் இருமாபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை, திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மீறி காமராஜர் சிலையை திறந்து காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications