சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட காங். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இக்குழு விரைவில் கூடி தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை தொடங்கும்.












Click it and Unblock the Notifications