'சிதம்பரம் கட்சியை விட்டு போனால் கவலையில்லை...': கார்த்தி சிதம்பரம் மோதலால் ஈ.வி.கே.எஸ். அதிரடி
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியை விட்டு போனால் கவலையில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே, அவர் அப்படி தெரிவித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் சமீபத்தில், சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில், காங்கிரசில் உள்ள தன் ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் 'ஜி - 67' என்ற அமைப்பையும் துவக்கினார்.

கார்த்தி சிதம்பரத்தின் இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு, கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சி நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், அந்த நோட்டீசுக்கு வரும், 30ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், 'கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்' என்றும் அதில் எச்சரிக்கப் பட்டிருந்தது.
கார்த்தி சிதம்பரமோ, 'நான் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்; என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை. அத்துடன், இளங்கோவன் அனுப்பியதாக சொல்லப்படும் நோட்டீஸ் எனக்கு வரவில்லை' என, பதிலடி கொடுத்தார்.
இந்தப் பிரச்னையால், இளங்கோவன் மீது கோபமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சிவகங்கை மாவட்டத்தில், த.மா.கா., தலைவர் வாசனை, ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''சிதம்பரம், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினால், கவலையில்லை,'' எனக் கூறினார். இது காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது தொடர்பாக இளங்கோவன் அளித்த பேட்டியின் விபரமாவது:-
த.மா.கா.,வில் சிதம்பரம் இணைவாரா என்பது குறித்து அவரோ, வாசனோ தான் சொல்ல வேண்டும்.காங்கிரசை விட்டு யார் வெளியேறினாலும், கட்சி கவலைப்படாது. ஈ.வெ.ரா., ராஜாஜி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள், காங்கிரசை விட்டு வெளியேறிய போது கூட, காங்கிரஸ் கவலைப்படவில்லை.
கார்த்தி சிதம்பரம் தன்னை முன்னிலைப்படுத்தி ஜி - 67 என்ற கூட்டத்தை நடத்திஉள்ளார். அந்த கூட்டத்தின் நோக்கம் தவறானது. 'காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்' என கார்த்தி அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதில், யாருக்கும் உடன்பாடில்லை.
காமராஜரைப் போல ஒப்பற்ற தலைவருக்கு பின், தமிழக காங்கிரசில் மக்கள் தலைவர் யாரும் இல்லை. கார்த்தி யாரை மனதில் வைத்து, முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுகிறார் என பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காங்கிரசுக்கு ஓட்டு போடுகிற தொண்டனும் ஓட்டு போட மாட்டான்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications