கூட்டணி குறித்து அடுத்த மாதம் காங். முடிவு செய்யும்: ஜி.கே. வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத் தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தால் மட்டுமே காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி எந்த கட்சிகளும் முடிவு செய்யவில்லை. பிப்ரவரியில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி புதிய வியூகம் அமைத்து 3வது முறையாக ஆட்சியில் அமரும்.
இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications