”தமிழின எதிரி காங்கிரஸை நாடு கடத்த வேண்டும்”கொ.ம.க ஈஸ்வரன்
சென்னை: தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீசியஸ் போன்ற நாடுகள் ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மியான்மர் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்திக்க கூடாது என்று ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர், ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கு எதிரானது.
ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு வேறு பல நாடுகள் ஆதரவு கொடுக்க இருந்த நிலையில் இந்திய பிரதமரின் சந்திப்பு அந்த தீ்ர்மானத்தை நீர்த்துப்போக காங்கிரஸ் செய்த சதித்திட்டமே என்று எண்ணத் தோன்றுகிறது.
மற்ற நாடுகள் எல்லாம் மனிதாபிமானத்தோடு இலங்கைக்கு எதிராக திரும்பி இருக்கும் நிலையில் மத்திய காங்கிரஸ் அரசு மட்டும் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கி்ரசை இந்த நாட்டை விட்டே மக்கள் துரத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications