பிரசாரம் செய்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாம்..: சொல்கிறார் ஜி.கே.வாசன்!
மதுரை: தாம் தேர்தல் பிரசாரம் செய்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று காலை செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு காங்கிரஸ் அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. இதில் 100 நாள் வேலை திட்டம் மிக முக்கியமானது. அதனால் மக்கள் வெற்றி எனும் பரிசை வழங்குவார்கள்.
நான் 18 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். இந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது
மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை போன்றவற்றின் உயர்வுக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம். தமிழகத்தில் மோடி அலை எதுவும் வீசவில்லை.
அ.தி.மு.க. மறைமுகமாக பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தால் மதவாத சக்திகளுக்கு துணை போவதாகத்தான் அர்த்தம். எனவே அ.தி.மு.க.வுக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பார்கள் என நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.