சென்னையில் கன மழை.. வடபழனி அருகே சுவர் இடிந்து 8 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தின் சுவர் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்,
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டது.












Click it and Unblock the Notifications