தமிழக காவல்துறை வெப்சைட்டில் இருந்து குற்ற தகவல்களை அழித்த போலீசார்
சென்னை: தமிழக காவல்துறை இணையதளத்தில் இருந்த குற்றங்கள் பற்றிய தகவல்களை போலீசார் அழித்துவிட்டனர்.
தமிழக காவல்துறை இணையதளத்தில் குற்றங்கள் குறித்த தகவல்களை மாநில குற்ற ஆவண காப்பகம் பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் அந்த இணையதளத்தில் இருந்து குற்றங்கள் குறித்த விவரங்களை பல எதிர்கட்சிகள் எடுத்து அதை முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு அதிமுக அரசையும், போலீசாரையும் விமர்சித்து வருகின்றன.

எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதில் அளித்தாலும், குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வரத் தான் செய்கின்றன. இந்நிலையில் காவல்துறை இணையதளத்தில் உள்ள குற்றங்கள் பற்றிய தகவல்களை அழித்துவிடுமாறு போலீசார் மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களும் தகவல்களை அழித்துவிட்டனர்.
இணையதளத்தில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதன் மூலம் பொது மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க முடியும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் செயல்பாடுகள் பற்றி மக்களிடம் வதந்திகளை பரப்புவதை தடுப்பது எங்களின் கடமை ஆகும். இதன் மூலம் கூட சில பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications