ஜாதிக்கலவரங்களை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது: ஜெயலலிதா

சென்னையில் இன்று துவங்கி உள்ள காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல நல்ல திட்டங்களால் தேசிய அளவில் சிறந்த நிர்வாகம், திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றுக்கான விருதுகளை தமிழகம் தொடர்ந்து வென்று வருகிறது.
இதுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கவும், இனி எதிர்கொள்ள விருக்கும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் இந்த மாநாடு வழி வகுக்கும்.
தமிழகம், ஜாதி, மத, ரீதியிலான வன்முறைகள் இன்றி அமைதியாக உள்ளது. இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சுதந்திரமாக செயல்படுவதே காரணம்.
மேலும், இதுபோன்ற வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த ஒரு விஷயத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாது. தமிழகத்தில் எந்த விதமான வன்முறையையோ, கலவரத்தையோ தூண்டும் விதத்தில் நடந்து கொள்ளும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications