சாப்பாட்டுப் பிரச்சினை... ஏற்காடு வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

Counting of votes in Yercaud halted
ஏற்காடு: ஏஜென்டுகளுக்கு சாப்பாடு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஏற்காடு தொகுதியில் வாக்கு எண்ணும் பணி ஒரு மணி நேரத்திற்குப் பாதிக்கப்பட்டு பின்னர் தொடங்கியது.

11வது சுற்றோடு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 12. 50 மணிக்கு வாக்கும் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. 2 மணியாகியும் தொடங்கப்படவில்லை.

12.50 மணிக்கு உணவு இடைவேளை என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் ஊழியர்கள் சாப்பிடப் போனார்கள். ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது கலந்து கொண்ட கட்சிகளின் ஏஜென்டுகளுக்கு சாப்பாடு தரப்படவில்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு அவர்கள் முறையிட்டனர்.

ஏஜென்டுகளுக்கு உணவு தர ஏற்பாடு செய்ய வேண்டியவர் அதை சரியாக செய்யாததால் குழப்பமாகி விட்டதாக தெரிகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் பின்னர் பிரச்சினை சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+