காதல் திருமணம் செய்த ஆசிரியை– பெற்றோர் ஏற்காததால் காதலனுடன் போலீசில் தஞ்சம்!
மேலூர்: மேலூரில் காதலித்து திருமணம் செய்தவருடன் ஆசிரியை ஒருவர் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலூர் அருகே ஒட்டக்கோவில்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன், பொக்லைன் ஆபரேட்டர். அதே ஊரைச் சேர்ந்தவர் அன்புமலர், தனியார் பள்ளி ஆசிரியை.
உறவினர்களான இந்த 2 பேரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு:
அன்புமலரின் பெற்றோர், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மேலூர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள கோவிலில் இன்று காலை காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.
மகளிர் போலீசில் தஞ்சம்:
திருமணக்கோலத்தில் காதல் ஜோடி மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் எங்களை சேர்த்து வைக்கக்கோரி போலீசாரிடம் தெரிவித்தனர்.
பேச்சு வார்த்தை முயற்சி:
இன்ஸ்பெக்டர் சாந்தி, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தார். அன்பு மலரின் பெற்றோர் எதிர்ப்பில் உறுதியாக இருந்ததால் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
காதலுடன் அனுப்பிய காவல்துறை:
இதையடுத்து காதல் ஜோடியினர் மேஜர் என்பதால் காதலனின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.