'டும் டும் டும்.. பீப்ப்பீ..' தாலி கட்டிய கையோடு ஓட்டுப் போட வந்த புதுமணத் தம்பதி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயெ நெல்லை வாக்குச் சாவடியில் மணமக்கள் இருவரும் வந்து வாக்களித்துச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று மதியம் புதுமணத் தம்பதி ஒன்று வாக்களிக்க வந்திருந்தனர்.
மணமகன் பெயர் முருகானந்தம், அவரது மனைவி பெயர் ராஜலட்சுமி. அவர்கள் இருவருக்கும் அப்போது தான் திருமணம் நடைபெற்றது. மனைவியின் நெற்றியில் திலகமிட்ட சில மணி நேரத்திலேயே தனது வாழ்க்கைத் துணையோடு ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்திருந்தார் முருகானந்தம்.
வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களைக் காட்டி அவர்கள் இருவரும் வாக்களித்தனர். கழுத்தில் மாலையுடன் திருமண உடையிலேயே வாக்களிக்க வந்திருந்த மணமக்களை, அங்கு வாக்களிக்க வந்திருந்த மற்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications