ஐபிஎஸ் வருண்குமாரின் சிறைக் காவல் நீடிப்பு – போலீஸ் காவல் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரியதர்ஷினியை காதலித்து ஏமாற்றிய வழக்கில் கோர்ட்டில் சரணடைந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை காவலில் எடுக்க போலீஸார் தாக்கல் செய்த மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட் நிராகரித்து விட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சாந்தி வருண்குமார் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இன்று போலீஸ் சார்பில் வருண் குமாரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.
காலதாமதமாக மனு அளிக்கப்பட்டுதால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
இதனால் வருண் குமாரை உடனடியாக போலீஸாரால் காவலில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications