உளுந்தூர்பேட்டை: விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி தே.மு.தி.க.வின் சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்தசாரதி, அருட்செல்வன், வெங்கடேசன் ஆகியோர் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. வழக்கறிஞர் மணிராஜ், உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல" என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications