ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு: அக்.1-ல் ஆஜராக இளங்கோவனுக்கு கோர்ட் சம்மன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அக்டோபர் 1-ந் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னைக்கு கடந்த 7-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடி சந்தித்தார்.

இது தொடர்பாக கடந்த 14-ந் தேதியன்று இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதனால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் இளங்கோவன் மீது முதல்வர் ஜெயலலிதா தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.
இதன் பின்னர் வரும் அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகிகளும் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
ஏற்கெனவே காமராஜர் அரங்க ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரின் மீதான வழக்கில் இளங்கோவன் முன் ஜாமீன் பெற்று மதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். தற்போது அவதூறு வழக்கிலும் அவர் நீதிமன்ற படிகளேற சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications