அன்பும், கருணையும் நிறைந்த ஒன் இந்தியா வாசகர்கள்... அரிய நோயோடு போராடும் கோவைப் பெண் நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசின் உதவி கிடைக்காமல் அரிய நோயோடு போராடி வரும் கோவைப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் ஓடிச் சென்று உதவிய ஒன் இந்தியா வாசகர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

கடந்த மார்ச் மாதம் சிஏபிஎஸ் எனப்படும் அரிய வகை நோயோடு போராடி வரும் கோவையைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணைப் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தச் செய்தியைப் படித்த அன்பும், கருணையும் கொண்ட ஒன் இந்தியா வாசகர்கள் உடனடியாக தங்களால் இயன்ற உதவியை அப்பெண்ணிற்கு செய்தனர்.

Covai woman thanks oneindia

இதனால் உரிய நேரத்தில் தேவையான பண உதவி பெற்று தற்போது அப்பெண் குணமடைந்துள்ளார். எனவே, தன் உயிரைக் காப்பாற்றிய ஒன் இந்தியா வாசகர்களுக்கு தேவி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

உரிய நேரத்தில் தங்களால் முயன்ற உதவியைச் செய்து பெண் ஒருவரின் உயிரைக் காக்க உதவிய வாசகர்களுக்கு ஒன் இந்தியாவும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடரட்டும் உங்கள் கருணையும், அன்பும், சேவையும்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+