இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டதா? முத்தரசன் சுளீர்
இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்குவதற்காகதான் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டதா என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்குவதற்காகதான் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டதா என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தினகரன் அணி சார்பில் தினகரன், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கை வரும் வகையில் அதன் செயல்பாடு உள்ளது என அவர் குற்றம்சாட்டினர். இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்குவதற்காகத்தான் தேர்தல் அறிவிப்பு தாமதமாக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
கவுரி லங்கேஷ் உட்பட பத்திரிக்கையளர்களின் கொலை குறித்து மத்திய அரசு வாய்திறக்கவில்லை என்றும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications