இடைத்தேர்தல் ரத்தானதால் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளது: முத்தரசன் காட்டம்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ததன் மூலம் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ததன் மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்றவே ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் புதன் கிழமை இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான உச்சக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.

இதையடுத்து ஆர்கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்த செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக காலூன்றவே ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
தேர்தலை ரத்து செய்ததால் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளது என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வந்தபிறகு தேர்தலை ரத்து செய்வது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மீண்டும் தேர்தல் நடத்தினால் பணம் கொடுக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications