போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
போபாலில் 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை: போபாலில் 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
போபாலில் விசாரணை கைதிகளாக இருந்த 8 பேர், அவர்களது குற்றம் உறுதி செய்யப்படாத நிலையில், என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக முன் வைக்கப்படும் தகவல்களின் தன்மை, அச்சம்பவம் தொடர்பாக கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு குறிப்பிட விரும்புகிறது.

சிமி அமைப்பினர்...
கொல்லப்பட்ட 8 பேரும் சிமி அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள்; பல்வேறு வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டிருப்பவர்கள்.

விளக்கம் தேவை
உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட சிறையிலிருந்து, குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் எப்படி தப்பியிருக்க முடியும் என்பது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இது எப்படி நடந்தது என்பது குறித்து மாநில அரசு முழு விளக்கத்தினை அளிக்க கடமைப்பட்டுள்ளது.

முரண்பாடுகள்
இந்த நபர்கள் ஆயுதம் தாங்கியிருந்ததாகவும், தங்களை தாக்கியதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மத்தியப்பிரதேச காவல்துறை கூறுவது, மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திரசிங்கின் கூற்றிலிருந்து முரண்பட்டதாக உள்ளது. மேற்படி நபர்கள், ஆயுதங்களை கைப்பற்றி கொண்டு சென்றதாக கூறப்படும் அதே வேளையில், அவர்களால் தப்பிப்பதற்கு ஒரு வாகனத்தை கைப்பற்றி கொள்ள முடியவில்லை என்று கூறுவது பொருத்தமற்றதாக உள்ளது.

சந்தேகங்கள்...
இச்சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ கிளிப்புகளில் தரையில் கிடக்கும் ‘தப்பிச் சென்ற' ஒரு நபரை போலீசார் சுடுவது பதிவாகியிருக்கிறது. மற்றொரு காட்சியில், தாங்கள் சரணடைய விரும்புவதாக உணர்த்தும் விதத்தில் ஒருவர் போலீசாரை நோக்கி கைகளை உயர்த்தி அசைப்பது பதிவாகியுள்ளது. இவை அனைத்தும், போலீஸ் தரப்பு தகவல்களின் உண்மை தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன.

நீதி விசாரணை
இத்தகைய பின்னணியில், இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்து பதவியிலிருக்கும் நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மத்தியப்பிரதேச முதலமைச்சர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இத்தகைய விசாரணை எந்த விதத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவோ, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவோ இருக்காது.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications