For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha and G Ramakrishnan
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி டிசம்பர் 4ந் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அஇஅதிமுகவின் தலைமை கேட்டுள்ளது. மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அஇஅதிமுகவும் உறுதியாக எதிர்த்து வருகிறது.

தேசிய, மாநில அரசியல் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டும் அதிமுகவின் வேண்டுகோளை ஏற்றும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடனும் இதர தோழமைக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று மாநில செயற்குழுகேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
CPM state secretary G Ramakrishnan on Saturday announced his party's backing for the AIADMK in the Yercaud bypoll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X