எங்களுக்கு 15 எம்எல்ஏக்கள் கிடைச்சிருப்பாங்க. ஜி.ராமகிருஷ்ணன் புலம்பல்!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தேர்தல்களில் விகிதாசார பிரதிநித்துவம் அமலில் இருந்தால் சட்டசபை தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்ற மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் என்ற கருத்தரங்கில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
- லோக்சபா தேர்தலில் பாஜக 31% வாக்குகளை மட்டுமே பெற்று அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
- 69% வாக்குகள் அக்கட்சிக்கு எதிரான வாக்குகளாகும். ஆகையால் பாஜக வெற்றியின் ஜனநாயக உள்ளடக்கத்தை ஏற்க முடியாது.
- 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு 38.4%; கிடைத்தது 150 எம்.எல்.ஏக்கள்.
- திமுக 22.4% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 23 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்தனர்.
- அதே நேரத்தில் 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்.
- அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., இடங்களுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன.
- 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு 6%. ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருந்தால் மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏக்கள் கிடைத்திருப்பர்.
- பல நாடுகளிலும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது.
- இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்திரஜித் குப்தா குழு பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பித்தும் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- சுதர்சன நாச்சியப்பன் குழுவிடமும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
- விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.
- தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும்.
- அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பதன் மூலம் பெருவாரியாக வெள்ளமென பணம் செலவிடுவதை தடுக்க முடியும்.
- தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவி வகிப்போர், உயர் பதவி வகிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வரக்கூடாது.
- தேர்தல் தொடர்பான வழக்குகள், ஒருவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- சிவகங்கை தொகுதியில் 2009 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் பெற்ற வெற்றி குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் அந்த 5 ஆண்டுகாலப் பதவியை முடித்து, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் வந்துவிட்டார்.
- ஆகையால் தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
More From
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications