For Daily Alerts
Just In
சென்னையில் சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை: போலீஸ் விசாரணை
சென்னையில் சி.ஆர்.பி.எப் பயிற்சிச் வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள பயிற்சி முகாமில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் சி.ஆர்.பி.எப் பயிற்சி முகாமில், பயிற்சி பெற்று வந்த வீரர் கைலாஷ் சந்தர் ராய் துப்பாக்கியால் சுட்டு இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட கைலாஷ் சந்தர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
CRPF man commits suicide by shooting himself. The man named Kailash Chander Roy who is suffered by some problems commits suicide today .He is the Native of west Bengal.