ரஜினிகாந்த் கோரிக்கை நிராகரிப்பு... சிஎஸ்கே வீரர்கள் கறுப்பு பட்டை அணியவில்லை
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே முதலில் பவுலிங் செய்கிறது. கா
சென்னை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே முதலில் பவுலிங் செய்கிறது. காவிரி பிரச்னைக்கு கண்டனம் தெரிவித்து, சிஎஸ்கே வீரர்கள் கறுப்பு பட்டை அணிய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
காவிர் மேலாண்மை வாரியம் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியை நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

பல மணி நேரம் நடந்த இந்த போராட்டங்களால் அண்ணா சாலை போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துளனர். பல இடங்களில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
பல களேபரங்களுக்கு இடையே சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கியுள்ளது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளார். பல கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்து, சிஎஸ்கே வீரர்கள் கறுப்பு பட்டை அணிய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால், வீரர்கள் கறுப்பு பட்டை ஏதும் அணியவில்லை












Click it and Unblock the Notifications