கடலூர், நாகையில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!
Subscribe to Oneindia Tamil

வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒருசில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறாது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு கடலூர் ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
அதேபோல், நாகை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications