For Daily Alerts
Just In
கடலூர் வாக்குஎண்ணிக்கை மையத்தில் தாமதம்: 8.30 மணிக்கு டிபன் டைம்
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் உள்ள 989 மையங்களில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடலூர் லோக்சபா தொகுதியில் தேவனாம்பட்டினத்தில் உள்ள வாக்கு மையத்தி இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு 8.30 மணிக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவேண்டும். ஆனால், 8.30 மணிக்குத்தான் வாக்கு எண்ணுபவர்கள் டிபன் சாப்பிடுகின்றனர். இதனால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. .
Comments
English summary
Cuddalore LS constituency vote counting hold for Breakfast.
Story first published: Friday, May 16, 2014, 9:08 [IST]