கடலூர்: ஆயுதப் படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக ஆயுதப்படை காவலர் பிரவீணா தற்கொலை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரியவந்துள்ளன.

கடலூரை அடுத்த நத்தபட்டு கிராமத்தை சேர்ந்த பிரவீணா, கடலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை தகவல் அறிந்த அவரது கணவர் ஆனந்து நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

cuddalore: woman police constable commits suicide

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரவீணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் குடும்பத் தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+