For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றி சிந்திக்கிறார் ஜெயலலிதா.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றியே சிந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், தான், மறு ஜென்மம் எடுத்துள்ளதாக உருக்கமாக குறிப்பிட்ட ஜெயலலிதா, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவை சந்திக்க உள்ள 4 தொகுதிகளிலும் மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

Currency issue: MK Stalin slam Jayalalitha

இதுகுறித்து இன்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை, ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் நேரத்தில், அவர்களுக்கு உதவும் வகையில் அறிக்கையில் எதுவுமே கூறப்படவில்லை.

ஜெயலலிதா மக்கள் நலனை பற்றி சந்திக்காமல், கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அதையே அவரது அறிக்கை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
MK Stalin slam Jayalalitha as she was not saying a single word about currency issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X