ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: மத்திய அமைச்சர் அல்போன்ஸ்
ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்: ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிலைமையை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளா கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு கோரிக்கை விடுத்தது.

திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கிவிட்டது.
இந்நிலையில் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் அது அறிவிக்க மத்திய அரசுக்கு எந்தவித திட்டமும் இல்லை. புயல் பாதிப்பு குறித்த எச்சரிக்கை நவம்பர் 30-ஆம் தேதி அன்றுதான் கிடைத்தது. முன்கூட்டி எந்த அறிவிப்பும் இல்லை என்றார் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications