For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையை நெருங்குகிறது வர்தா.. பேய் காற்று சுழன்று அடிக்கிறது.. ஆயிரம் மரங்கள் சாய்ந்தன
வர்தா புயல் சென்னையை நெருங்குவதால் அதிக காற்றுடன் மழை கொட்டி வருகிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது. சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் சென்னை மற்றும் ஸ்ரீகரிகோட்டா நடுவே வர்தா புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புயல் சென்னையை நெருங்கியபடி இருப்பதால் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.மதியம் 1 மணி நிலவரப்படி சென்னையில் 140 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. மரங்கள் பயங்கர வேகத்தில் ஆட்டம்போடுகின்றன. இதனால் நகரின் பல பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன.
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் குழந்தைகளை அழைத்து வந்து சிலர் புயலை காண்பிப்பதை பார்க்க முடிந்தது.
Comments
English summary
Chennai receives heavy rain and wind as cyclone Vardah is nearing the city.