வர்தா புயல் பாதிப்பு- சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் நேரம் மாற்றம்
வர்தா புயல் பாதிப்பில் இருந்து சென்னை மாநகரம் இன்னமும் மீளவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் இருந்து புறப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு ரயில் நிலையங்களும் தப்பவில்லை. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தொகை பயணம் தொடங்கும் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு திருப்பி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை- நியூ ஜல்பைகுறி (22611) காலை 11 மணிக்கு பதில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும்; சென்னை - திருவனந்தபுரம் (12623) இரவு 7.45 பதில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமாரி - பெங்களூரு (16525) காலை 10.30 பதில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே வர்தா புயல் காரணமாக 2 நாட்கள் நிறுத்தப்பட்ட சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்சேவை இன்று தொடங்கியது. பணிக்கு செல்பவர்கள் பறக்கும் ரயிலில் செல்லத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications