For Daily Alerts
Just In
தொடரும் கனமழை.. சென்னை, திருவள்ளூர், காஞ்சி மக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்
சென்னை: வர்தா புயல் கரையை கடந்தது. இருப்பினும் அடுத்த 12 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
வர்தா புயல் கரையை கடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இரவு 7 மணிக்கு பின்பும் கனமழை நீடிக்கும் என்பதால் வெளியே வர வேண்டாம்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
புயல் பாதிப்புகளை உடனே சீர் செய்ய அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Comments
English summary
TN CM OPS has requested people of Chennai, Tiruvallur and Kancheepuram to stay indoors as Vardah cyclone's landfall process is going on.